Sunday, November 09, 2025

அறுந்த வாலை ஆட்டாதீர்

 


2018 ஆம் ஆண்டு சுபாஷ் சந்திர மாலிக் என்பவரது நூலை மேற்கோள் காட்டி "தமிழை ஆண்டாள்" என்கிற தலைப்பில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் பேசியத்தைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சையையும் அதன்பிறகான சனாதனிகளின் மிரட்டல்களையும் கண்டித்து எழுதப்பட்ட கவிதை....


வேசிமகன் 

என்கிறான் ஒருவன்

வெட்டுவேன் நாவை 

என்கிறான் மற்றொருவன்!


உண்ணா நோன்பிருக்கிறது

ஒரு கூட்டம்!

கொன்றாலும் தவறில்லையென்கிறது

இன்னொரு கூட்டம்!


வெட்டிவீரம் பேசும்

முட்டாள் குரங்குகளே

வெட்டுவது இருக்கட்டும் - முதலில்

தொட்டுத்தான் பாருங்களேன்?


மேற்கோள் காட்டியதற்கே

போர்கோலம் பூண்டு நிற்கும்

பூனூல் புலிகளே!

ஆரியத்து நரிகளே!


உன் கோத்திரன் இதை

உரைத்தபோது

போர்த்திப் படுத்துவிட்டு

சூத்திரன் இவரென்பதால்

ஆத்திரம் கொள்வீரோ?


அர்ச்சகனென்ற பெயரில்

ஆலயக் கருவறையுள்

ஆரேழு பெண்டிருடன்

அந்தரங்க ஆராதனை

அம்பியொருவன் செய்தானே...


அன்றும் இதுபோல் 

குதித்தீரா? - அன்றி

அதையும் மனதினுள் 

இரசித்தீரா?


சங்கரராமன் என்பவரை

சங்கறுத்துச் சாய்த்தபோது

எங்கு சென்று ஒளிந்தீர்கள்?

என்ன செய்து கிழித்தீர்கள்?


கோவிலென்றும் பாராமல்

கொன்று போட்ட அந்த 

கொடுஞ்செயலை

கோமிய விரும்பிகள்

எதிர்க்கவில்லை

கோபம் கொண்டு அன்று

கொதிக்கவில்லை! 


வாழ்வாதாரப் போராட்டங்கள்

வருடமெல்லாம் நிகழ்ந்தாலும்

வாய்திறந்த வழக்கமில்லை

வருந்தக்கூட மனமில்லை


இன்றோ

ஆண்டாளென்று வந்தவுடன்

அலறியடித்து அனைவருமே

கூண்டோடு வந்து குரலெலுப்பும்

குள்ளநரித்தனம் இதுவன்றோ!


சூடிக்கொடுத்த சுடர்கொடியாம் அவள் 

பாடிக்களித்த திருமொழியை

தேடியொருமுறை படியுங்கள்

பின்பு நீலிக்கண்ணீர் வடியுங்கள்!


பெய்யாத மழைத்துளி

மண் சேர்வதேது?

செய்யாத தவறுக்கு

மன்னிப்பு எதற்கு?


சிரத்திலிருந்து  பிறந்ததால்

சிறந்தவர் நீவிரென்றும்

நிறத்தினால் கருத்தவரை

வேறென்று வெறுத்தமைக்கும் 

நீவிரல்லவோ கோரவேண்டும்

நித்தமும் மன்னிப்பு?


முரட்டுத் தமிழினத்தை 

மிரட்டிப் பணியவைக்க 

வரட்டுக் கனவு காணும்  

குருட்டுப் பூனைகளை 

விரட்டி அடித்திடுவோம்!

அடக்கி ஒடுக்கிடுவோம்!


சண்டித்தனம் செய்துபார்க்க 

இது சாமியார் மடமில்லை!

பிரித்தாளும் சூழ்ச்சிக்கு 

இனியும் இங்கு இடமில்லை!


மனுதர்மச் சேட்டைகளை 

மறுபடி இங்கு காட்டாதீர்!

மறத்தமிழன் மண்ணில் நின்று 

அறுந்த வாலை ஆட்டாதீர்! 



                          - நிலவை பார்த்திபன்

No comments:

Post a Comment

Comments are always welcome