Saturday, November 08, 2025

கவிதை நேரங்கள்


 

கவிதையென நான்
எழுதும் எதையும்
கடுகளவும் இரசிப்பதில்லை
அவள்!
அவளுக்கான என் பொழுதுகளை
அவை அபகரித்துக்கொள்வதாக
ஆத்திரப்படுகிறாள்!
ஆனால்
இனிக்கும் தேநீர்
பொழுதுகளின்போதான
இதமான உரையாடல்கள்!
காலைச் சிற்றுண்டியின்போதான
காரசார விவாதங்கள்!
அலுவல் இடைவெளிகளின்போதான
அலைபேசி விசாரிப்புகள்!
வீடு திரும்பியது முதல்
விளக்கணைக்கும்வரை
விரிவாக அலசப்படும்
அன்றைய நிகழ்வுகள்
என அவளிடம்
களவுபோகும் அனைத்தும்
என் கவிதைக்கான நேரங்கள் என்பதை
கடைசிவரை சொல்லப்போவதில்லை அவளிடம்!

- நிலவை பாா்த்திபன்

No comments:

Post a Comment

Comments are always welcome