செந்தமிழ் நாடெனும் போதினிலே
இங்கு தேள் கொட்டுதே
சிலர் காதினிலே!
எங்கள் தாய் தமிழ்
பூமியின் மீதினிலே
சில வந்தேரி
நாய் கூட்டம் வாலாட்டுதே!
யாரடா மாற்ற?
வக்கற்றுப் போனோமோ
நீ பெயர் சூட்ட?
எம் மண்ணில் நீ வந்து
உன் கொடியேற்ற
பேடிகளா நாங்கள்
வேடிக்கை பார்க்க?
ஆளாத உன் பெயர் ஆளுநரா?
அற்பனே நீயென்ன ஆண்டவனா?
ஆரியன் என்றாலே ஆணவமா?
எம்மினம் என்றாலே ஏளனமா?
தமிழ்நாடோ தமிழகமோ
நீ யார் அதைச் சொல்ல?
உன் தலைக்கனத்தை தரையிறக்க
இது உன் நிலம் அல்ல!
அனுமதியோம் இனியிங்கு
நீ கிடந்து துள்ள!
தரணியிலே எவருமில்லை
தமிழரெமை வெல்ல!
எழுவர் விடுதலைக்கு
எமனாக நின்றாய்!
இணையச் சூதாட்டத்தை
இருக்கட்டும் என்றாய்!
தமிழர் வரலாற்றினைத்
திரித்தாயே நன்றாய்!
நல்ல குடிகளின்
நம்பிக்கை கொன்றாய்!
என்றென்றும் தமிழ்நாடு
என்றே இனி உரைப்போம்!
எவரேனும் இடர் செய்தால்
ஏறி நெஞ்சில் உதைப்போம்!
வந்தேரிகள் வாய்க்கொழுப்பை
வளராது தடுப்போம்!
குள்ளநரிக் கூட்டமதன்
குரல்வளையை உடைப்போம்!
- நிலவை பாா்த்திபன்

No comments:
Post a Comment
Comments are always welcome