சாணி பீ திங்கும்
சாதிப் பன்னிகளா
சந்தோசமாடா இப்ப?
தண்ணித் தொட்டி
என்ன சாக்கடையா
நீ பேண்ட கருமத்த நெப்ப?
கொதிக்குதுடா உங்க
மொகத்துல காரி துப்ப!
மலத்தக் காட்டிலும்
நாறுதடா உங்க
மனசுல உள்ள குப்ப!
ஆண்ட பரம்பர
அசிங்கங்களா நீங்க
திருந்தப்போறது எப்ப?
மாண்டு மண்ணா
நீ போனாக்கூட
மறக்கமாட்டோம் உன் தப்ப!
சாமி கும்புட
கோயிலு வந்தா
சாதியச் சொல்லி தடுப்ப!
காப்பி கேட்டு
உன் கடைக்கு வந்தா
தனியொரு குவளையில் குடுப்ப!
சாமி வந்ததா
சாக்கு சொல்லி உன்
வன்மத்த வாந்தி எடுப்ப!
உன் நாத்தத்த மறைக்க
நாளொரு விதமா
நல்லவன் போல நடிப்ப!
விலகி வேணான்னு
போனா அவங்க
விலாவில் ஏறி மிதிப்ப!
என்னைக்குத்தான்டா மத்த சாதியையும்
மனுசப் பிறவியா மதிப்ப?
மெல்ல தலதூக்கி
எதுத்து கேட்டா
மேலயும் கீழயும் குதிப்ப!
சாகுற வரைக்கும் சங்கடப்படாம
சாதிச் சாக்கடையில் குளிப்ப!
எச்ச பய நீன்னு
தெரிஞ்சு போச்சுடா
என்ன செஞ்சு
இனி கிழிப்ப?
நாத்தம் புடிச்ச உன்
சாதித் திமிர வச்சு
நாக்க மட்டுந்தான் வழிப்ப!
இனியொரு பயலும்
அசைக்க முடியாது
இந்த மண்ணில்
சிலர் இருப்ப!
வேற மண்ணுல
போயி முடிஞ்சா
வேக வை
உன்னோட பருப்ப!
தீரத்தோட நின்னு போராடி இனி
வேரறுப்போம் உங்க வெறுப்ப!
எப்பவும்போல ஏறி மிதிச்சா
எடுப்போம் இனிமே செருப்ப!
- நிலவை பாா்த்திபன்

No comments:
Post a Comment
Comments are always welcome