Tuesday, December 02, 2025

இதங்கள்

 


நீண்ட இரைச்சலுக்குப் பின்பான
நிசப்த நிமிடம்

காணாமல் போய் கிடைத்த
காதலியின் கடிதம்

வாசிக்கையில் சிலிர்க்கும்
வர்க்கப் புரட்சி ஒன்றின் சரிதம்

காயங்கள் ஆற்றிக் கடக்கும்
காலத்தின் துரிதம்

தன்னலங்களுக்கு மத்தியில் 
தப்பிப் பிழைத்திருக்கும் மனிதம்

சிராய்ப்புகள் 
சிலவற்றிற்குப் பின்பான
சின்னதொரு மகுடம்

ஆங்காங்கே வெளிப்படும்
அன்பெனும் புனிதம் 

என இடையிடையே கைகூடும்
சில இதங்களை நம்பி

இன்னமும் நீண்டுகொண்டிருக்கிறது
இந்த வாழ்க்கை

இடம் வலம் 
இயந்திரமயமாகிவிட்டபோதிலும்
சில நிராசைகள்
நிரந்தரமாகிவிட்டபோதிலும்.....


 - நிலவை பார்த்திபன்

 - 

No comments:

Post a Comment

Comments are always welcome