நீ தண்ணீர் குடித்துச்
சிந்திய நீரில் மொய்க்கும்
ஈக்கள்!
நீ தேனீர் குடித்த
கோப்பையைச் சுற்றும்
தேனீக்கள்!
நீ வெட்டியெறிந்த
நகத்தினைச் சூழும்
கட்டெறும்புகள்!
உன் கூந்தல் உதிர்த்த
பூவில் கூடும்
பொன்வண்டுகள்!
நீ தேவதை என்பதற்கு
தேவையா இனியும்
வேறு சான்றுகள்?
- நிலவை.பார்த்திபன்
No comments:
Post a Comment
Comments are always welcome