சிறியப் போர் உச்சத்தில் இருந்தபோது சீறிய என் பேனாவிலிருந்து சிதறிய சில கவித்துளிகள்...
இருப்பதாகக் நம்பப்படும் இறைவா
உன் இரக்கத்தின்
இலட்சணம்தான் இதுவா?
சிரிய தேசம் சீரழிவது கண்டும்
சிலையெனவே இருப்பது
உன் இயல்பா?
மரண ஓலம் ஒன்றே
உனக்கு இசைவா?
மனித உயிர்கள் மட்டும்
அங்கு மலிவா?
இறைவனுக்கும் இரக்கத்திற்கும்
இலட்சம் மைல்கள் தொலைவா?
ஆண்டவனை அணுகுதல்
இனி அறிவா?
உனை ஆராதனை செய்தமைக்கு
பலன் இந்த அழிவா?
ஈழப் போரில் உறங்கிய நீ
எப்பொழுது இனி எழுவாய்?
இது அதிகாரப் போட்டிகளின் விளைவு
ஆனால் அப்பாவிக் கூட்டத்திற்கே அழிவு!
பிஞ்சுகளும் பொசுக்கப்பட்ட பிறகு
நெஞ்சில் எதற்கு இன்னும் பக்தி உணர்வு?
கண்ணீரின்றி வாழ்வதே
அங்கு கனவா?
அந்தக் கதறலுக்கு
விடிவு காலம் வருமா?
சர்வாதிக்க சதிகளுக்கு
சாட்சி இவர்கள் பிணமா?
என்று கிட்டும்
இந்நிலைக்கு தீர்வு?
கிடைப்பதெங்கே போரில்
தொலைத்த வாழ்வு?
உருக்குலைந்து உயிர் விடுவது
சபிக்கப்பட்ட சாவு!
சர்வதேசம் சடுதியில்
இதை மறக்கும்!
இனி எண்ணெய்க் கிணற்றில்
கண்ணீர் அங்கு சுரக்கும்!
சில நரித்தனம்
கொண்ட நாடுகள் இதை
தனக்குள்ளே எண்ணி இரசிக்கும்!
- நிலவை.பார்த்திபன்
No comments:
Post a Comment
Comments are always welcome