Sunday, December 30, 2018

இந்திப் பாடலுக்கு என் தமிழ் வரிகள்

https://youtu.be/PriYgiqUOlE

மேற்கண்ட youtube linkல் உள்ள ஹிந்தி பாடலுக்கு பதிலாக நான் எழுதிய தமிழ் வார்த்தைகள்...

பல்லவி

பெண்: நித்தம் நித்தம் கண்ணில் ஒரு கனா!
என் நெஞ்சுக்குள்ளே உன்னால் ஒரு வினா!

ஆண்: கண்ணே உன் கனவில் நானா?
நான் காண்பதிங்கே பெண்ணா இல்லை மானா?

பெண்: ஐயோ நீதான் யாரடா!
மையல் கொண்டேன் நானடா!

ஆண்: பெண்ணே என் பேர் சொல்லவா?
கன்னம் தொட்டுனைக் கிள்ளவா?

சரணம் 1

பெண்: வெல்லம் என்று சொல்லி விட்டால் இனிக்குமா?
உன் வெற்று வார்த்தை என்தன் ஆசை தணிக்குமா?

ஆண்: எட்டி நிற்க எனக்கென்ன விருப்பமா?
பெட்டைக் கோழி கண்டால் சேவல் வெறுக்குமா?

பெண்: அன்பே என்னை அள்ளியெடு!
உன் ஆண்மை என்னை வெல்ல விடு!

ஆண்: அழகே உன்னை அள்ளிக் கொடு!
நான் பழகும் வரை சொல்லிக் கொடு!

பெண்: வாடா என்தன் வேடா!
என் வெக்கத்தினை வேட்டையாட!

சரணம் 2

ஆண்: நெஞ்சுக்குள்ளே நீயிருந்து என்னைக் கொல்ல!
நேற்றுவரை பட்ட பாடு என்ன சொல்ல?

பெண்: காதல் தீ சுட்டதுன்னை மட்டுமல்ல!
கன்னி என்தன் துன்பம் கொஞ்ச நஞ்சமல்ல!

ஆண்: போதும் இந்த இடைவெளி!
உன்னில் பொதிய ஒரு இடமளி!

பெண்: இதயம் எங்கும் இன்ப வலி!
என் மூச்சில் நீயும் முத்துக்குளி!

தேனே உன்னை நானே
தினம் தேடித்தேடி வாடினேனே!

- நிலவை.பார்த்திபன்

No comments:

Post a Comment

Comments are always welcome