Sunday, December 30, 2018

கிறிஸ்து ஜெயந்தி

தேவாலயத் தெருக்களெங்கும்
தெள்ளமுத இசைத்துளிகள்!

வீதிகளின் சுவர்களெங்கும்
விவிலியத்தின் பொன்மொழிகள்!

நடு நடுவே வீடுகளில்
நட்சத்திர மின்னொளிகள்!

கிறங்க வைக்கும் அழகுடனே
கிறிஸ்துமஸ் மரக்கிளைகள்!

டிசம்பரில் ஒரு பொன்னாள்!
கிறிஸ்துமஸ் எனும் திருநாள்!
இல்லத்திலும் இதயத்திலும்
இன்பமேற்றும் பெருநாள்!

ஈராறு மாதங்களில்
இதுவுமொரு சிறந்தநாள்!
இறைதூதர் இயேசுபிரான்
இவ்வுலகில் பிறந்தநாள்!

நன்னாளாம் இந்நாளில்
நாடு செழிக்க வேண்டிடுவோம்!
நல்லிணக்கம் தழைத்திடவே
வல்லோனை வணங்கிடுவோம்!

விவிலியத்தின் பாதைதனில்
விலகாமல் நடந்திடுவோம்!
இடையில் வரும் தடையனைத்தும்
இறையருளால் கடந்திடுவோம்!

 - நிலவை.பார்த்திபன்

No comments:

Post a Comment

Comments are always welcome