Sunday, December 30, 2018

தீர்வதெங்கே தீவிரவாதம்

தீர்வதெங்கே தீவிரவாதம்
ஆதி மனிதன் 
அன்றைய தினம் 
ஆயுதங்கள் தவிர்த்திருந்தால் 
நாதியற்று மடிந்திருக்கும் 
நமதருமை மனிதகுலம்! 

சாத்வீகக் கோரிக்கைகள் 
சாத்தான்களுக்குப் புரியாதவரை 
சாட்டை மொழி 
பேசுதல் தவிர 
சாமானியனுக்கு வேறு வழியில்லை! 

பயணிக்கும் படகெங்கிலும் 
அடக்குமுறையெனும் ஆயுதம் கொண்டு 
ஆதிக்க சக்திகள் 
ஆங்காங்கே துளையிடும்போது 
திக்கற்றுப் போன கூட்டம் 
தீவிரவாதத் தீவேறுதல் 
தவிர்க்க இயலா தர்மமாகிறது! 

அடிமைப்பட்ட கூட்டமதன் 
அடிவயிற்று அனல்நெருப்பை 
அமிலம் கொண்டு 
அணைக்க எண்ணும் 
ஆளும் வர்க்கம் 
இருக்கும் வரையில் 
தீர்வதெங்கே தீவிரவாதம்?

No comments:

Post a Comment

Comments are always welcome