Monday, December 12, 2022

வெறுப்புவாதத்தை வேரறுப்போம்


 நித்தமொருமுறை கிழிக்கப்படுகிறது

நிறைவுற்ற தேதி!

மொத்தமாகக் கிழிக்கப்படுகிறது
சில மோசக்காரர்களால் நீதி!
வளைக்கப்பட்ட சட்டத்தால்
இழைக்கப்படுகிறது அநீதி!
பிழைக்க வந்த சிலரால்
நுழைக்கப்படுகிறது மனுநீதி!
தீர்ப்பெழுதும் அதிகாரம் இன்று சில தீவிரவாதிகளின் கையில்!
நீதியின் காவலர்கள்(?) பலரின்று
ஆளும் வர்கத்தின் பையில்!
சட்ட நூல்களின் படி
எழுதப்படும் தீர்ப்புகளைவிட
சிலர் சட்டைக்குள்ளிருக்கும் நூலின்படி
எழுதப்படும் தீர்ப்புகளே
சமகால பேராபத்து!
நீதிபதிகளை விமர்சித்தல்
நீதிமன்ற அவமதிப்பென்றால்
சிலர் நீதிபதிகளாய் இருப்பது
நீதிக்கே அவமதிப்பு!
நிலுவையில் உள்ள வழக்குகள்
நீண்ட வரிசையில் காத்திருக்கையில்
அவமதிப்பு வழக்கிங்கு
அவசரமாக விசாரிக்கப்படுகிறது!
எச் ராஜாக்களையும் குருமூர்த்திகளையும்
எச்சரிக்கக்கூட துணியாத நீதிமன்றம்
சவுக்கை தண்டித்து
தன் அழுக்கை நிரூபித்திருக்கிறது!
விமர்சிக்கப்பட்டவரே
விசாரணை செய்து
விலங்கிட ஆணையிடுவதென்பது
அடக்குமுறைகளின் உச்சம்!
அராஜகத்தின் எச்சம்!
பலநாளாய் குறிவைத்த இலக்கு!
பாய்ந்திருக்கிறது இப்போது வழக்கு!
சனாதனத்தின் பசிக்கு இன்று சவுக்கு!
நாளையே நிகழலாம் இது நமக்கு!
அறப்போரொன்று அவசியம் தேவை
அதனால் இன்றே வேலெடுப்போம்!
கொழுப்பேறிய சில
கருப்பு அங்கிகளின்
வெறுப்புவாதத்தை வேரறுப்போம்!

- நிலவை பாா்த்திபன்

No comments:

Post a Comment

Comments are always welcome