அருகிலிருக்கும் ஒரு மருத்துவமனையின்
அவசரச் சிகிச்சைப் பிரிவு!
அங்கு அச்சமும் கவலையும்
அப்பிக் கிடக்கும் முகங்கள்!
பரபரப்பானதொரு ஒரு காவல் நிலையம்!
அங்கு பயம் பதற்றம் படிந்த
பலப்பல முகங்கள்!
இறுதிச் சடங்கு நடைபெறுமொரு மயானவெளி!
அங்கு இழப்பின் வலியால்
இதயம் வெம்பி அழுதபடி சில முகங்கள்!
இவையனைத்தையும் கூர்ந்து கவனித்துக் கடந்து வந்தபின்
இப்போது சொல்லுங்கள்!
இன்னுமா பெரிதாய்த் தெரிகிறது
இன்றளவிலான உங்கள் கவலைகள்?
- நிலவை பாாத்திபன்
No comments:
Post a Comment
Comments are always welcome