வருசத்துக்கு ரெண்டு வாட்டி
கொடிய ஏத்துறீங்க!
வரைமுறையே இல்லாம
வரிய ஏத்துறீங்க!
கார்பரேட்டு காரனுக்கு
காப்பி ஆத்துறீங்க!
கஷ்டப்படும் மக்களுக்கு
கதவ சாத்துறீங்க!
பாரதத்த பாடையேத்தி
பால ஊத்துறீங்க!
மக்களோட தலையிலதான்
மண்ண தூத்துறீங்க!
வகுப்புவாத கலவரங்கள்
வளர வாழ்த்துறீங்க!
குடிசைகள மூடி மறைக்க
துணிய போத்துறீங்க!
வகை வகையா வரிய போட்டு
வயித்தில் அடிக்கிறீங்க!
வீதியிறங்கி போராடினா வீட்ட இடிக்கிறீங்க!
நாளுக்கொரு வேசம் போட்டு
நல்லா நடிக்கிறீங்க!
கஷ்டப்படும் மக்களோட
கழுத்த நெறிக்கிறீங்க!
நாட்ட காக்கும் ராணுவத்தின்
நரம்ப அறுக்குறீங்க!
நாலு வருசம் கழிச்சு அவங்க
நடுத்தெருதான் போங்க!
அதானிக்கும் அம்பானிக்கும்
அள்ளிக் குடுக்குறீங்க!
சாமானியன் கடனுக்காக
சவுக்க எடுக்குறீங்க!
மதவெறிய திணிச்சு பலர்
மனசக் கெடுக்குறீங்க!
எதுத்து கேள்வி கேட்டுப்புட்டா
வழக்கு தொடுக்குறீங்க!
தேசத்தோட வளர்ச்சியவே
தேக்கி முடக்குறீங்க!
கோமியத்த குடிச்சு குடிச்சு
கொழம்பி கெடக்குறீங்க!
- நிலவை பாா்த்திபன்
No comments:
Post a Comment
Comments are always welcome