வையகத்தின் கையடக்கப் பிரதி!
ஐயமகற்ற கையிலெடுத்துப் படி!
புரட்டப்படாத புத்தகம் ஒவ்வொன்றும்
திறக்கப்படாத பெட்டகம்!
புத்தகங்களைப் புரட்டு
புத்திக்குள் ஏதினி இருட்டு?
வாழ்க்கையை வசந்தமாக்க
வாசிப்பை வழக்கமாக்கு!
புத்தகங்களைக் கையிலெடு
பூமியிலிருந்தே வானம் தொடு!
புத்தகம் உன்னைப் புத்தனாக்கும்!
சித்தத்தின் பித்தம் நீக்கி
உன்னைச் சுத்தமாக்கும்!
புத்தியை புத்தகங்களால் நிரப்பு!
சத்தியமாய் உனக்கில்லை இறப்பு!
பூசையறையின் தேவைகளை
புத்தக அறைகள் நிரப்பட்டும்!
புத்தகப் பூக்கள் பூத்துக் குலுங்கி
பூமியில் வாசம் பரப்பட்டும்!
- நிலவை பாா்த்திபன்
No comments:
Post a Comment
Comments are always welcome