மாட்டுவண்டி ஏறி
வரும் மன்மதனே!
எனை மாட்டுப் பெண்ணாய்
ஏற்பாயா?
இல்லை மாட்டேன் என்று
மறுதலித்து என் மனதில்
அமிலம் வார்ப்பாயா?
நான் கல்யாணத்தன்றே
கணவனை இழந்த
கறைபடாத முல்லை!
விதவை எனக்கும்
ஆசை வருவதில்
விசித்திரம் ஒன்றும் இல்லை!
தூக்கம் துறந்த கண்களில்
இன்று ஏக்கம்
மட்டுமே மிச்சம்!
ஏங்கித் தவிக்கும்
பேதை என்னை
ஏற்பாயோ என அச்சம்!
பெண்பார்க்கும் படலம்
பல கண்டு புண்ணாய்ப்
போனது நெஞ்சம்!
பெண்ணைக் கடவுளாய்ப்
போதித்த நாட்டில் இன்று
பண்பாட்டிற்கே பஞ்சம்!
சம்மதம் என்ற
ஒற்றைச் சொல்லில்
என் சங்கடமெல்லாம்
தீர்ப்பாயா?
இல்லை சமையலை
மட்டும் ருசித்துவிட்டு
சந்தடியின்றி நகர்வாயா?
வரும் மன்மதனே!
எனை மாட்டுப் பெண்ணாய்
ஏற்பாயா?
இல்லை மாட்டேன் என்று
மறுதலித்து என் மனதில்
அமிலம் வார்ப்பாயா?
நான் கல்யாணத்தன்றே
கணவனை இழந்த
கறைபடாத முல்லை!
விதவை எனக்கும்
ஆசை வருவதில்
விசித்திரம் ஒன்றும் இல்லை!
தூக்கம் துறந்த கண்களில்
இன்று ஏக்கம்
மட்டுமே மிச்சம்!
ஏங்கித் தவிக்கும்
பேதை என்னை
ஏற்பாயோ என அச்சம்!
பெண்பார்க்கும் படலம்
பல கண்டு புண்ணாய்ப்
போனது நெஞ்சம்!
பெண்ணைக் கடவுளாய்ப்
போதித்த நாட்டில் இன்று
பண்பாட்டிற்கே பஞ்சம்!
சம்மதம் என்ற
ஒற்றைச் சொல்லில்
என் சங்கடமெல்லாம்
தீர்ப்பாயா?
இல்லை சமையலை
மட்டும் ருசித்துவிட்டு
சந்தடியின்றி நகர்வாயா?
No comments:
Post a Comment
Comments are always welcome