Monday, January 20, 2014

ஈழத்திற்கு இருளில்லை

அங்கு எங்கள் சகோதரர்களின்
சடலங்கள் புதையுண்டிருக்கலாம்
ஆனால் எங்கள் சபதங்கள்
இன்னும் புதைபடவில்லை!

அங்கு எங்கள் குடும்பங்கள்
கொளுத்தப்பட்டிருக்கலாம்
ஆனால் எங்கள் கொள்கைகள்
இன்னும் கொளுத்தப்படவில்லை!

அங்கு எங்கள் போராட்டங்கள்
பொசுக்கப்பட்டிருக்கலாம்
ஆனால் எங்கள் போர்க்குணம்
இன்னும் பொசுக்கப்படவில்லை!

எங்கள் வீரர்கள் அங்கே
வீழ்ந்துபோயிருக்கலாம்
ஆனால் எங்கள் வீரம்
இன்னும் வீழ்ந்துவிடவில்லை!

முள்வேலி முகாம்களில்
எங்கள் முன்னோடிகளை
முடக்கியிருக்கலாம்
ஆனால் எங்கள் முயற்ச்சிகள்
இன்னும் முடங்கிவிடவில்லை!

எங்கள் வெற்றியின் கிளைகள்
அங்கு வெட்டப்பட்டிருக்கலாம்
ஆனால் எங்கள் வேர்கள்
இன்னும் வெட்டப்படவில்லை!

தனியீழம் நோக்கித்
தளராமல் நடப்போம்!
தமிழ்த்தேசம் அமையத்
தடையனைத்தும் கடப்போம்!

நம் இனமழிக்க வருவோரின்
இருதயங்கள் பிளப்போம்!
சகுனிகளைச் சங்கறுத்துச்
சாக்கடையில் கலப்போம்!

புரட்சிப் புற்கள் மேயக்கிடைத்தால்
புள்ளி மான்களும் புலியாகும்!
நாம் புரட்டிப்போடும்
புயலாய் எழுந்தால்
பகைவர் கூட்டம் பலியாகும்!

பொழுது ஒருநாள்
புலரும் என்று
பொறுத்திருந்தால் பொருளில்லை!
இறுதித் தமிழன் இருக்கும்வரையில்
ஈழத்திற்கு இருளில்லை!

No comments:

Post a Comment

Comments are always welcome