Saturday, January 26, 2019

குடிமகனே எழு!

குடியரசு தினமின்று
குடிமகனே எழு!
குருதியை நாட்டிற்கு
கொடுத்தவனைத் தொழு!

தரிசான தேசத்தை உன்
அறிவாலே உழு!
பல கரங்கள் ஒன்றினைந்தால்
ஏதிங்கு பழு!

நம்பிக்கை நூல் கட்டி
இமயத்தை இழு!
இனியாள வேண்டும் நமை
இளைஞர்கள் குழு!

புது இரத்தம் பாய்ந்தால்தான்
புலியாகும் புழு!
தோல்வியையும் தோற்கடிக்கும்
உன் தோளின் வலு!

நடு நடுவே வீழ்ந்தாலும்
நயாக்ராவாய் விழு!
நாடுன்னைப் போற்றும் இனி
தயக்கங்கள் விடு!

எடுத்தால் இனி அகிம்சையெனும்
ஆயுதத்தை எடு!
தேசத்தின் வளர்ச்சியது
தேங்காமல் தடு!

விஞ்ஞான வில்லெடுத்து
அம்புகளைத் தொடு!
தேசத்தின் வளர்ச்சிக்கு
உன் பங்கைக் கொடு!

- நிலவை பார்த்திபன்

No comments:

Post a Comment

Comments are always welcome