எட்டு வயசுல
முட்டாய தட்டிவிட்டதுக்கு
கட்டிப்புரண்டு சண்டை போட்டுட்டு
மறுநாளு மதியத்துக்குள்ள
மறுபடியும் சேந்துக்கிட்டோம்
ஏழாப்பு படிக்கும்போது
எறி பந்து விளையாட்டுல
எக்குதப்பா சண்ட போட்டுட்டு
மூனு நாள் கழிச்சு
முனியப்ப அண்ணாச்சி கடையில்
ப்ரைஸ் அட்ட கிழிக்கும்போது
பிரண்ட்ஸ் ஆயிட்டோம் மறுபடியும்
பத்தாப்பு லீவுல
கமலா ரஜினியான்னு பேசி
கைகலப்பாயி பிரிஞ்ச பிறகு
முத்தாலம்மன் கோயில் திருவிழாவுல
முருகேசு பய சேத்துவைக்க
மூனே நாள்ல சேந்துக்கிட்டோம்
காலேஜ் சேந்த புதுசுல
ஒரே புள்ளைய
ரெண்டு பேரும்
சைட் அடிச்ச பிரச்சனையில
ஒரு மாசம் பேசாம இருந்துட்டு
சினிமா கொட்டாயில பாத்தப்ப
சிரிச்சுப் பேசி கூடிக்கிட்டோம்
இப்ப வளந்து
புள்ள குட்டின்னு ஆனபிறகு
வருசக் கணக்கா
பேச்சு வார்த்த இல்ல
வாட்சப்புல போட்ட
வக்கத்த ஒரு
அரசியல் சண்டையால....
அதனாலதான் சொல்றேன்.....
நட்புல வரும் சண்ட வெறும்
கண்ணுல விழும் தூசி
எப்ப அது விழுந்தாலும்
எடுக்குறது ஈசி
இந்த உருப்படாத அரசியல்
ஒரு துருப்பிடிச்ச ஊசி
அது நட்ப குத்தி சாகடிக்கும்
நண்பா நீயும் யோசி
இளமைக்கால நட்பு எல்லாம்
இயற்கையோட ஆசி
அத இல்லாம ஆக்கணுமா
அரசியல பேசி?
அரசியலும் தேவைதான்
அத ஆழமா நீ வாசி
கொள்கை வேற நட்பு வேற
குழப்பிக்காம நேசி!
- நிலவை பார்த்திபன்
No comments:
Post a Comment
Comments are always welcome