Sunday, September 14, 2014

தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014 - உனக்காக!


உனக்காக! 


கையிலதான் பூக்கூட
கண்ணுலதான் ஏக்கத்தோட 
மயிலு நானும் காத்திருக்கேன் 
மாமன் உனக்காக! 

என்னைக்கு நான் உங்கூட 
சேரப்போறேன் உரிமையோட?
எப்ப சேதி சொல்லப்போற 
எனக்காக?

கூடையில வச்ச பூவு 
வாசம் மாறிப் போகுமுன்ன 
கூந்தலில வச்ச பூவு 
வாடி வதங்கிப் போகுமுன்ன 
குறும்புக்கார மாமன் நீயும் 
இந்தக் குயிலைத் தேடி வரணும்!

கூறப் பொடவ குளிச்சி உடுத்தி 
கூட்டாஞ்சோறு ஆக்கி வடிச்சு 
குத்தாலத்து மேகம் போல 
கூந்தலத்தான் அள்ளி முடிஞ்சு 
காத்திருக்கும் எனக்கு நீயும் 
தாலி கொண்டு தரனும்! 

வச்ச கண்ணு வாங்காம 
வாச பாத்துக் காத்திருக்கேன்!
நீ வைக்கப்போகும் பொட்டுக்காக  
பிச்சிப் பூவா பூத்திருக்கேன்!

                                - நிலவை.பார்த்திபன்

1 comment:

  1. வணக்கம்
    தங்களின் கவிதை வந்து கிடைத்துள்ளது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது நடுவர்களின் பரிசீலனையில் உள்ளது என்பதை அறியத் தருகிறேன் போட்டியில் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

Comments are always welcome